1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (19:17 IST)

அதுவரை நடிப்பேன் - பழம்பெரும் நடிகை!

உடல் நிலை ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என்று பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா கூறியுள்ளார்.


 
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என போற்றப்படும் நடிகை கே.ஆர்.விஜயா  தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பழமொழிப் படங்களில் சுமார் 400 திரைப்படங்களில் நடித்து இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
 
சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
சாய் இளவரசன் இயக்கத்தில் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா கூறியதாவது, நான்  சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இதுவரை பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. 
 
என் இளமைக்காலத்தில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்ததால்  அப்போது எனக்கு கிடைத்த புகழை எண்ணி சந்தோஷப்படக்கூட நேரமில்லை இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

என் கணவர் உயிரோடு இருக்கும்போது  உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இரு.  யாரை பற்றியும் கவலைப்படாதே என எனக்கு தைரியம்  கூறினார். அதுமட்டுமின்றி  எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள். உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோ‌ஷமா இருன்னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. ஆதலால் என் உடல் ஒத்துழைக்கும் வரை நான் நடிப்பேன் இவ்வாறு அவர் கூறினார்.