வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:40 IST)

எஸ்பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் லேசான கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே 
 
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் நலமாக இருப்பதாகவும் தன்னுடைய உடல் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்
 
இந்த நிலையில் தற்போது எஸ்பி பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரை மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது
 
மேலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது