1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:11 IST)

மணிரத்னத்திற்கு காய்ச்சல் மட்டுமே கொரோனா இல்லை!

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஜான்சன் மூலம் தகவல்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு பணியில் ணிரத்னம் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஜான்சன் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல் காரணமாக மட்டுமே  மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிகிச்சை முடிந்தவுடன் நாளை மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.