1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (19:49 IST)

பிப்ரவரி 14ஆம் தேதி பெப்சிக்கு தேர்தல்: மீண்டும் ஆர்.கே.செல்வமணி போட்டி!

பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் பெப்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெப்சி என்னும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிப்ரவரி 14ஆம் தேதி பெப்சி சங்கத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் இந்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் தலைவர் பதவிக்கு 3-வது முறையாக போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் ரூபாய் 3 கோடிக்கு மேல் பல பிரபலங்கள் நிதி உதவி செய்துள்ளார்கள் என்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்