செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (19:26 IST)

போதைப்பொருள் வழக்கு...பிரபல நடிகைக்கு நீதிமன்றம் ஜாமீன் !

சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகை நிக்கி கல்ராணியை போதைத் தடுப்புப் பிரிவினர் கைது செய்து பெங்களூர் அஹ்ரகார சிறையில் அடைத்தனர்.இன்று அவருக்கு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளனர்.

கன்னட திரைப்பட நடிகை சஞ்சனா கல்ராணி, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகை நிக்கி கல்ராணியை போதைத் தடுப்புப் பிரிவினர் கைது செய்து பெங்களூர் அஹ்ரகார சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால் தனக்கு ஜானின் வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

எனவே, சஞ்சான் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு  உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பித்தனர் போலீஸார். இதனையடுத்து, சஞ்சனா கல்ராணிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியதுடன், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு அழைக்கும்போது, ஆஜராகும்படி  பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்தியாவில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் தங்கைதான் சஞ்சான் கல்ராணி என்பது குறிப்பிடத்தக்கது.