1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (00:34 IST)

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக் கூடாது: சரோஜா தேவி கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக் கூடாது என சரோஜா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் நடிகை சரோஜாதேவி வழங்கினார்.
 
பின்பு, பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,  நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மட்டும் மறக்கவே இயலாது. பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் அவர். அவரை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது.
 
முன்பு, நமது தென்னிந்திய நடிகர் சங்கத்துடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரையுலகங்கள் இணைந்திருந்தன.
 
தென்னிந்திய நடிகர் சங்கம் என்றால் 4 மொழியை சேர்ந்தவர்களும் நடிக்கின்றோம். கலையுலகத்துக்கு மட்டும்தான் ஜாதி , மதம், மொழி என்ற எந்த வேறுபாடுகளும் இல்லை. எனவே, இப்படிப்பட்ட  பாரம்பரியமிக்க நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக் கூடாது என்றார்.