செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:37 IST)

வடிவேலு வேண்டாம் என நினைக்கும் படக்குழு? – நாய்சேகர் தோல்விதான் காரணமா?

வடிவேலு நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையில் விஜய் சேதுபதியோடு அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களை படம் திருப்திப் படுத்தவில்லை. இதனால் படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த தோல்வியால் வடிவேலுவை தங்கள் படங்களில் புக் செய்ய நினைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்போது பின் வாங்குகிறார்களாம். அதற்குக் காரணம் வடிவேலுவிடம் முன்பிருந்த நகைச்சுவை ஸ்பார்க் இப்போதில்லை என்றும் ட்ரண்ட்டை புரிந்துகொள்ளாமல் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு பெரிய தொகை கொடுத்து அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுந்துள்ளதாக தெரிகிறது.