ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (13:10 IST)

மாநாடு படக்கலைஞர்களை புகழ்ந்த இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் மாநாடு படத்தைப் பார்த்து அந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களைப் பாராட்டியுள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து இரண்டாவது வாரம் வரை வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் தனது படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குனர் ஷங்கர் இப்போது மாநாடு படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். அதில் ‘மிகவும் அறிவுப்பூர்வமான முறையில் படத்தை எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிலம்பரசன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் கலக்கியுள்ளனர். தமிழ் சினிமாவுக்கான புதிய மற்றும் பொழுதுபோக்கான அனுபவம் மாநாடு’ எனக் கூறியுள்ளார்.