செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (12:48 IST)

மூன்றாவது முறையாக நயன்தாரா மீது ஆசைப்படும் இயக்குனர்

நயன்தாராவை சோலோவாக வைத்து ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறார் மோகன் ராஜா.



 
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கியவர் மோகன் ராஜா. இந்தப் படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா தற்போது இயக்கிவரும் ‘வேலைக்காரன்’ படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா தான்.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயனை ஹீரோயினாக்கிய மோகன் ராஜா, அவரை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமொன்றை இயக்க ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

காரணம், ‘தனி ஒருவன்’ எடுக்கும்போது, ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி இருவர் மட்டுமே மனதில் இருந்ததால், அவர்களின் கேரக்டர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தாராம். ஆனால், தற்போது இயக்கிவரும் ‘வேலைக்காரன்’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பக்கபலமான கேரக்டரில் நடித்துள்ளாராம் நயன்.