செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:42 IST)

20 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் இயக்கும் இயக்குனர் கதிர்!

இயக்குனர் கதிர்  இயக்கத்தில் புதிதாக தமிழில் ஒரு படம் உருவாக உள்ளது.

இயக்குனர் கதிர் இயக்கிய இதயம், காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்கள் 90களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் காதல் வைரஸ் திரைப்படம் தோற்றதை அடுத்து அவரால் தொடர்ந்து படங்கள் இயக்க முடியவில்லை. இதையடுத்து இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. அந்த படத்தில் கதாநாயகனாக கிஷோர் என்பவர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.