1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:34 IST)

விஜய்க்கு கதை சொல்லி ஓகே வாங்கிய இளம் இயக்குனர்!

இயக்குனர் தேசிங் பெரியசாமி விஜய்க்கு ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினிக்காக கதை எழுதி அதை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயத்தில் அவர் விஜய்க்கும் கதை ஒன்றை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளாராம். ரஜினி படம் முடிந்ததும் அந்த படத்தை தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.