1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (08:02 IST)

உதயநிதி படத்துக்குத் தடை – நீதிமன்றம் ஆணை

சினிமா பைனான்ஸியர் நகுநந்தன் என்பவர் தொடுத்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம் மிஷ்கின் த்ரில்லர் படம் இயக்க தடை விதித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் இயக்குனர் மிஷ்கினுக்கு தனது மகனை கதாநாயகனாக வைத்து ஒரு த்ரில்லர் படம் இயக்க 1 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின் படி கடந்த 2016 ஆம் ஆண்டே மிஷ்கின் அப்படத்தை இயக்கிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் படத்தைத் தாமதப்படுத்தி வந்ததாகவும் இப்போது அந்தக் கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற பெயரில் படமாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு  கதாநாயகனை வைத்து திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதனால் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்திற்குப் புதிய பிரச்சனை உருவாகி உள்ளது.