1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (08:35 IST)

ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த கோப்ரா படக்குழு… ஆனாலும் கடுப்பில் தயாரிப்பாளர்!

கோப்ரா படக்குழு ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளதாம்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் மீதிக் காட்சிகளையும் அங்கேயே படம் பிடிக்க வேண்டிய கடடாயத்தில் படக்குழு இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்கு செல்வது தாமதமாகிக் கொண்டே வந்தது. இதனால் அந்த காட்சிகளை செட் போட்டு இங்கேயே படமாக்கலாம் என தயாரிப்பாளர் கூறினாலும் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். அதையடுத்து இப்போது கோப்ரா படக்குழு ரஷ்யாவுக்கு சென்று அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்னும் 13 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்தவேண்டும் என இயக்குனர் சொல்லியுள்ளாராம். ஏற்கனவே அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்னுமா என்று அதிர்ச்சியில் அதிருப்தியிலும் இருக்கிறாராம் தயாரிப்பாளர் லலித்குமார்.