1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 13 மே 2020 (09:56 IST)

சென்னையில் மேலும் 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி – ரயில் நிலையம் மூடல்!

சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தங்கியிருந்த ரயில்நிலையம் மூடப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு காவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மற்ற 39 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

சோதனையின் முடிவில் மேலும் 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 5 பேரும்  தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த ரயில் நிலைய அறையும் சீல் வைக்கப்பட்டு ரயில் நிலையம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக (containment zone) மாறி இருக்கிறது.