1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:59 IST)

குளறுபடியை மீறி வாக்கு எண்ணிக்கை! - பாக்யராஜ் பரபரப்பு புகார்!

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த குளறுபடி தீராத நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்வதாக பாக்யராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும், நாசர் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது.

அதில் நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதிக வாக்குகள் உள்ளது குறித்த பிரச்சினையை சரி செய்யாமல் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடர்வதாக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.