வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:51 IST)

அவரோட படத்தை ஒன்னுவிடாம பார்த்திடுவோம் - செம குஷியில் நன்றி ட்விட் போட்ட இளம் நடிகர்!

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து தற்போது மீண்டும் கணவர் சூர்யா தயாரிப்பில் நடித்துள்ள பொன்மகள் வந்தால் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.


இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்காக ஜோதிகா - சூர்யா இணைந்து பேட்டியளித்த போது, தாங்கள் இருவரும் பாலிவுட்டின் இளம் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்று விடாமல் பார்த்து விடுவோம் என கூறினர். திறமைவாய்ந்த நடிகரான  ஆயுஷ்மான் குரானா "அந்தாதுன்" படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். மேலும் அவரது விக்கி டோனர் படம் தான் தமிழில் ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட தாராள பிரபு படம் என்பது குறிப்பிடத்தக்கது.