ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:40 IST)

சினிமா உதவி இயக்குநர் படுகொலை ! திரைத்துறையினர் அதிர்ச்சி

சென்னை அருகேயுள்ள மாங்காட்டில் உதவி இயக்குநர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டி தமிழ், இந்தி, தெலுங்கு,கன்னடம் எனத் திரைத்துறையில் பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி  சினிமா உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தவர்  ருத்ரா(25). இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடுவதற்காக அவர் தனது நண்பரும் உதவி இயக்குநருமான மணிகண்டன் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது இவர்களுடம் மேலும் சில நண்பர்கள் இணைந்து மதுகுடித்து புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். இடையே மணிகண்டனுக்கும் ருத்ரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஆபாசமாகப் பேசியுள்ளனர். அது அடிதடியில் முடிந்துள்ளது.

இதில் அடிவாங்கிய மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ருத்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் ருத்ராவை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தனர் ருத்ராவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.