வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:52 IST)

தேஜாவு படத்தின் இயக்குனரோடு இணையும் அஸ்வின்!

அருள்நிதி நடித்த தேஜாவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன்.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். 

அதனால் ஏற்பட்ட நெகட்டிவ் இமேஜை சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான செம்பி திரைப்படம் ஓரளவு போக்கியது. இந்நிலையில் இப்போது அவர் தேஜாவு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.