வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (11:40 IST)

முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன ஆர்யா

சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் ஆர்யா, ரசிகர்கள் வழிமறித்ததால் முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனார்.
 
பாஸ் என்ற பாஸ்கரன், சேட்டை, இரண்டாம் உலகம், ராஜா ராணி, கடம்பன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஆர்யா. இவை இயல்பாகவே சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 
 
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு மூலம் 600 கிலோ மீட்டர் தூரம் தனது நண்பருடன் பைக்கில் பயணம் செல்ல திட்டமிட்டார். அதன்படி சுமார் 50 பேருடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு பெரம்பலூர் வந்தார். 
 
பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி திரும்பினார். அப்போது நடிகர் ஆர்யா மற்றும் அவருடன் வந்தவர்கள் வேப்பந்தட்டை அருகே ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். 
 
ஆரியா வந்த தகவலை அறிந்த அந்த பகுதி ரசிகர்கள் திடீரென அங்கு கூடினார்கள். ஆருடன் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். கூட்டம் அதிகமானதால் ஆரியா உடனடியாக முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு சைக்கிளில் சென்னையை நோக்கிப் புறப்பட்டார்.