1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (14:07 IST)

நிறைய பேர் கல்யாணம் செய்துகொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள்… ஆண்ட்ரியா பதில்!

நடிகை ஆண்ட்ரியா திருமணம் குறித்த கேள்விக்கு அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆண்ட்ரியா கலந்துகொண்டு வருகின்றார்.

அப்படி ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பேசிய ஆண்ட்ரியா “நிறைய பேர் திருமணம் செய்துகொண்டும் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்கிறார்கள். அதே போல சிலர் திருமணம் செய்யாமல் சந்தோஷமாகவே இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கும் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. ஆனால் இப்போது அதைக் கடந்து வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.