1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:55 IST)

சினிமா வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரிக்க தெரியவில்லை- அமலா பால்

நடிகை அமலா பால் தன்னுடைய சினிமா வாழ்க்கை சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தாலும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து இப்போது அவர் வெப் தொடர்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய படங்களின் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் அவர் குடியெமைதே என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரின் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் அளித்த நேர்காணலில் ’ எனக்கு 17 வயது இருக்கும்போது திரைத்துறைக்குள் வந்தேன். என் சினிமா வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கை சினிமா வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. அவை இரண்டையும் பிரிக்கும் கலை எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதை இரண்டையும் தனியாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.