செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (14:41 IST)

முன்னாள் கணவர் மறுமணம்! தனது புது காதல் குறித்து ஓப்பனாக சொன்ன அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 


 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய்,  ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் மீடியா அமலா பாலின் பக்கமே தலையவைத்து படுத்திருந்தது.  இருப்பினும் இதை பற்றி எதுவும் வாய்திறக்காமல் வந்த அமலா பால் ஆடை படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசும்போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், ஆனால், அவர் திரையுலகினரை சேர்ந்தவரல்ல என்று கூறி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். 


 
மேலும் பேசிய அவர், தற்போதைக்கு திருமணத்தை பற்றி எதுவும் யோசிக்க வில்லை என்றும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமலா பால் விஷ்ணு விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.