செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:30 IST)

நடிப்பை ஓரங்கட்டிவிட்டு தயாரிப்பாளராக அவதாரமெடுத்த அமலா பால்!

நடிகை அமலா பால் தயாரிப்பாளராக புது அவதாரமெடுத்துள்ளார்! 
 


 
“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால்,  தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 
 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால்  அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்த அமலா பால் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரமெடுத்துள்ளார்.

அந்த வகையில் “கடவர்” என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் அமலா பால். தீடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தற்கான குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது.
 
‘கடவர்’ கதையை கேட்டேன்.இதுவரை நாம் பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட வித்யாசமான திரைக்கதையாக இருந்தது.கேரளாவில் பிரபலமான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே "ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட உள்ளது.
 
இதனை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் என்னை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.