1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (10:13 IST)

நீ எனக்கு வேணாம்... நான் மறுமணம் செய்துக்கொண்டேன் - கணவரை பிரிகிறாரா ஆலியா மானசா?

ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
ஆலியா தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இனியா ஷூட்டிங்கிற்கு திடீர் விசிட் அடித்த சஞ்சீவ், ஆலியாவுக்கு ஹாய் சொல்ல, ஆலியா “ஹாய் அண்ணா” எனக் கூறியுள்ளார்.
 
கடுப்பாகி "அண்ணாவா"? என சஞ்சீவ் கேட்க,  “ஆமா, எனக்கு சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது” என பதிலடித்துள்ளார்.நீ தான் என்ன தனியாக விட்டு விட்டு படம் பார்க்க போற இல்ல அதனால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டேன் என கூறி கடுப்பேத்தியுள்ளார்.