1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (13:32 IST)

நிறைமாத மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த வருடம் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.
 
இதையடுத்து தாய்மையடைந்த ஆல்யாவிற்கு சீமந்தம் நடத்தி அழகு பார்த்தார் சஞ்சீவ். மேலும், கடந்த சில நாட்களாகவே தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து கியூட்டான சில அப்டேட்டுகளை கொடுத்து  வருகின்றனர். சமீபத்தில் கூட  பெண்குழந்தை பிறக்கவுள்ளதை சிம்பாலிக்காக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் "எங்களுக்கு ஒரு கனவு நனவாகும் தருணம்" என கூறி  பென்ஸ் கார் வாங்கியுள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.