1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (14:46 IST)

பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பிய வக்கீல்!

Ponniyin Selvan
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தனக்கு திரையிடப்பட்டு காண்பிக்காமல் வெளியிடக்கூடாது என வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் திடீரென வக்கீல் ஒருவர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 
 
அந்த நோட்டீசில் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தை தனக்கு திரையிட்டு காட்டாமல் திரையிடக்கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது