வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:38 IST)

நடிகை சுவேதா பாசுவுக்கு டும் டும் டும்!

பாலியல் தொழிலில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற நடிகை சுவேதா பாசு. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது பெற்றவர், பின்னர் ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி தமிழ் என பல படங்களில் படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து பாலியல் தொழில் செய்ததாக ஸ்வேதாவை காவல்துறை 2014-ம் ஆண்டு கைது செய்தது. ஆனால், நான் யார் நிர்பந்தத்துடன் இத்தொழிலை செய்யவில்லை. என் வாழ்விற்காகவே இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர் நடித்த 'சந்திர நந்தினி' எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றார். 
 
இந்நிலையில், அந்த பிரச்னையின் போது உறுதுணையாக இருந்த ரோஹித் மிட்டல் என்னும் இந்தி இயக்குனரை ஸ்வேதா காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்தது. 
 
இவர்களின் திருமணம் வரும் 13-ம் தேதி நடக்கவிருப்பதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.