1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (14:06 IST)

பட்டம் பெற படுக்கையை பகிர்ந்த பிரபல நடிகை; சக நடிகை பகீர் குற்றச்சாட்டு

மிஸ் இந்தியா பட்டம் பெற தனுஸ்ரீ பலரிடம் படுக்கையை பகிர்ந்தார் என நடிகை ராக்கி சாவந்த் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார். 
 
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா பலரிடம் படுக்கையை பகிர்ந்துதான் மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
இந்த செய்தி தற்பொழுது வேகமாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதற்கு தனிஸ்ரீ தத்தா என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.