ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (17:53 IST)

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்: ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.