1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (14:26 IST)

முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 16 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழில் பெரிய இயக்குனர்கள் மற்றும் பெரிய கதாநாயகர்களை வைத்து வரிசையாக படம் தயாரித்துக் கொண்டு இருந்த நிறுவனங்களில் லைகாவும் ஒன்று. ஆனால் தொடர்ந்து அவர்கள் தயாரித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் நீண்ட காலமாக அவர்களின் இந்தியன் 2 படமும் முடங்கிக் கிடக்கிறது. மேலும் மணிரத்னத்திம் கனவுப் படமான பொன்னியின் செல்வனையும் தயாரித்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமாவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.