அன்னாசிப் பழ கேசரி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
ரவா - 1 கப் (வறுத்தது)
ஜீனி - 3/4 கப்
அன்னாசிப்  பழம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை -7
தண்ணீர் - 3 கப்
நெய் - 3 டீஸ்பூன்  
செய்முறை:
 
நான்ஸ்டிக் பானில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை லேசகா தூவிகொண்டே கிளறிவிடவும் (கட்டிபடாமல்). ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் சர்க்கரையை கொட்டி கிளறவும். பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப்  பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன் (சிறிதுநேரத்தில்) இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.
 
பின் தனியாக ஒரு  டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, திராட்சை பொரித்து அதனுடன் கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு  சுவையான அன்னாசிப் பழ கேசரி தயார்.
 
குறிப்பு:
 
பழத்தை தண்டு நீக்கி பொடியாக துண்டுகள் செய்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு துண்டுகள் வைத்துக் கொண்டு, மீதியை கொஞ்சமாக நீர் விட்டு வேக விடுங்கள். சீக்கிரம் வெந்துவிடும். ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வையுங்கள். மேலே சொன்ன அதே முறையில்  கேசரியை செய்யலாம்.

எல்லாம் காட்டு

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

அடுத்த கட்டுரையில்
Show comments