1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (11:17 IST)

ஐபிஎல் 2022: டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப் மூலமே இவ்வளவு கோடி லாபமா?

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெறுவதற்கு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதுவரை ஐபிஎல் தொடரை டிஎல்ப், விவோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தன.

இந்நிலையில் இப்போது 2022 ஆம் ஆண்டுக்கான தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மூலமாகவே 1000 கோடி ரூபாய்க்கு மேல் பிசிசிஐக்கு வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தவும். பிசிசிஐயின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் அன பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.