வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:27 IST)

ஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி

ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, கஜகஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 
இந்நிலையில் விழா தொடங்குவதற்கு முன்பே சில போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்து லீக் போட்டியில் பெண்கள் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. 
 
எதிரணியை வீழ்த்த இந்திய மகளிரணி கடுமையாக முயற்சி செய்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 61-79 என்ற கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.