1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (04:02 IST)

3வது ஒருநாள் போட்டி: தோனி அதிரடியால் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி மழைகாரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.



 
 
இந்த நிலையில் நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டி மேற்கிந்திய தீஇவுகள் அணி டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இந்திய அணிக்கு 3வது ஓவரிலேயே விக்கெட் இழந்து அதிர்ச்சி கொடுத்தாலும் ரஹானே மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டட்த்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்தது. தோனி 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
 
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.1 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.