1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:18 IST)

ஆஸி நிதான ஆட்டம் – இந்தியாவின் முடிவு சரியா ?

ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போடியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் இந்தியாவின் வரலாற்று வெற்றியோடு சிறப்பாக முடிந்ததை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14 ) பெர்த் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இப்போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லாமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களோடு களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்களை சேர்த்துள்ளது. இரு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடித்து நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் தினறி வருகின்றனர். இஷாந்த் ஷர்மா, பூம்ரா, உமேஷ் யாதவ், ஷமி என நான்கு பவுலர்களையும் மாற்றி மாற்றி பந்து வீசவைத்தும் இந்தியாவுக்கு விக்கெட் கிடைக்காமல் உள்ளது. இதனால் இப்போது சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.