வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (07:24 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2வது தோல்வி

srilanka
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்திய அணி நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது தோல்வி காரணமாக இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளதை.