1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. This is enough to Wealth get Kupera vilakku...!!

குபேரனின் அருளை பெற இதை செய்தாலே போதும்...!!

குபேர விளக்கு
செல்வத்துக்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த செல்வத்தின் பாதுகாவலனாய் இருப்பது குபேரன் ஆகும். குபேரன் அருள்பெற மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணி  வரை குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.


அந்த குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் ஏற்றிவர எல்லா வளங்களும் கிடைக்கும். 
 
வியாழக்கிழமை மாலை வேளையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த   வேண்டும். நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். 
 
புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும் தடவ வேண்டும். நிலைப்படிக்கு ஒரு  பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும். நிலைப்படிக்கு இருபுறமும்  பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும். 
 
வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்கவேண்டும். முதலில்  விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும். 
 
இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் துன்பங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தம் பனி போல் கரையும். குபேரன் நமக்கு தங்குதடையில்லா செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட வெள்ளெருக்கு விநாயகர்...!!