தொடர்புடைய செய்திகள்
- கிருஷ்ணன் அவதரித்த இடமும் அவரது பால லீலைகளும் !!
- ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான ‘குயின்’… வெளியான செம்ம அப்டேட்!
- 4 மாவட்டங்களில் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
- கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி வைரஸ்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
- தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை- ராதாகிருஷ்ணன்
கிருஷ்ணனது லீலைகள் சிலவற்றை பார்ப்போம் !!
கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்தகோபர் வீட்டில் சேர்ந்து, அனைவரையும் மயக்கி குழுந்தையை ஆசையுடன் எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டு விஷம் நிறைந்த பாலை ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்தைப் பற்றிக் கொண்டு பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையே குடித்துவிட்டார்.
அவளும் சுயஉருவில் சாய்ந்து இறந்தாள். யசோதையும், ரோகிணியும் ஓடிவந்து குழந்தையை எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர்.
அப்போது குழந்தை அழுதது. கால்களை உதைத்துக் கொள்ள கால்கள் பட்டதும் வண்டி உடைந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான்.
அடுத்து காற்று வடிவில் குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கன் திருணாவர்த்தனையும் கண்ணன் கொன்றுவிட்டான்.
கர்க்க முனிவர் நந்தகோபன் விருப்பப்படி மங்கல காரியங்களைச் செய்து ரோகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும் யசோதை மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் செய்து வைத்தார்.
அடுத்த கட்டுரையில்
