தொடர்புடைய செய்திகள்
- வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் வழிபாடு செய்வது எவ்வாறு...?
- செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
- முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமை வழிபாட்டு பலன்கள் !!
- மார்கழி மாத திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசனம் காண்பது சிறப்பு ஏன் தெரியுமா...?
- பலரும் அறியாத இந்து கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள் !!
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது....?
சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும்.
அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
வளமான வாழ்வு கிடைக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுக்கு நிலையான சந்தோஷம் கிடைக்கும்.
அடுத்த கட்டுரையில்
