வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குபேரனை பூஜை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

ஒருவருக்கு செல்வம் வந்து சேரும்பொழுது பணமும் தானாக வந்து சேரும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இப்படி செல்வம் உங்களிடம் சேர்ந்து நீங்கள் சந்தோசமாக இருக்க குபேர வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று.

குபேரனை ஒருவர் மனமுருகி பிரார்த்தித்தால் குபேரன் அந்த பக்தருக்கு திடீரென செல்வத்தை வாரி வழங்குவார். இது பலரும் தங்களுடைய வாழ்வில் கண்டுணர்ந்த உண்மை. குபேரன் செல்வ செழிப்பு கொண்டவர்.
 
குபேரன் உங்களுக்கு செல்வத்தை கொட்டி கொடுக்க வேண்டுமானால் நீங்கள் கண்டிப்பாக குபேர வழிபாடு செய்ய வேண்டும். குபேர வழிபாடு மூலம் குபேரனை வழிபட்டு பூஜை செய்து வந்தால் மட்டுமே உங்களுக்கு செல்வம் அதிக அளவில் வந்து சேரும்.
 
குபேரனை எந்திரத்தின் மூலமே நீங்கள் வழிபட வேண்டும். தங்கம், வெள்ளி, செம்பு இதில் ஏதாவது ஒரு தகட்டில் ஒன்பது கட்டங்களை வரைந்து அதில் 72 என்கிற கூட்டு எண் வருமாறு ஒன்பது கட்டங்களிலும் எங்களை நிரப்ப வேண்டும். இதற்கு பால், பன்னீர் பூக்கள் இவைகளை அர்ப்பணித்து தொடர்ந்து 72 நாட்கள் பூஜை  செய்துவர வேண்டும். இப்படி பூஜை செய்து வரும் குபேர வழிபாட்டின் போது குபேரனுக்கான மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
 
மந்திரம்:
 
"ஓம் யக்ஷ்ய குபேராய வைஸ்ரவணாய, தான தான்யாதிபதியே தன தான்ய ஸம்ருத்திமே தேஹி தபாயஸ்வாஹா" என்கிற இந்த மந்திரத்தை எந்திரம் வைத்து  பூஜை செய்து சொல்லி வர வேண்டும்.