1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரிசெய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

மனைவி மீது கணவனுக்கோ ஈர்ப்பில்லாமல் இருந்தால், வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்துகொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.
 
7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு  தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது.
 
7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி, சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.
 
செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் 7 முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு, குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீர்ந்து உடல்  ஆரோக்கியத்தையும், மனதில் இதனால் ஏற்படும் எரிச்சல், கோப குணங்களையும் தீர்க்கிறது.
 
உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது.  இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.