1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:18 IST)

கடலூர் அருகே அரசு பேருந்தை திருடிய இளைஞர்

கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.


 

 
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
இதற்கிடையில் பேருந்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அஜித்குமார்(27) என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 
 
மேலும் அந்த சிறுவன் இதுவரை 17 பேருந்துகளை இதுபோன்று ஓட்டிச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.