வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (11:32 IST)

அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞர்: புதுச்சேரியில் கைது

தமிழகத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 
 
சென்னயில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கொண்டு வரப்பட்டு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர், லாஸ்பேட்டையிலுள்ள கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புதுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்றிரவு புதுச்சேரி பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
 
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அரசு பேருந்தில் சந்தேகம் படும்படி பெரிய பையுடன் அமர்ந்திருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.  அவர் கையிலிருந்து பையை சோதனையிட்டத்தில் 380 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து புதுச்சேரி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.