வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வேதவல்லி
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (14:39 IST)

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

முதல்வரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 

 
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ  செம்மலை திமுக தலைவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும், கருணாநிதியை கருணாநிதி என்று தான் அழைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
 
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அப்படி என்றால், ஜெயலலிதாவை, ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் மேலும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.