வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (15:59 IST)

பணி புரிந்த நிறுவனத்தில் 89 மடிக்கணினிகளை திருடிய ஊழியர்கள்

பணி புரிந்த நிறுவனத்தில் 89 மடிக்கணினிகளை திருடிய ஊழியர்கள்

பணி புரிந்த நிறுவனத்திலேயே 89 மடிக்கணினிகளை திருடிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.


 

 
சென்னையை அடுத்த பெருங்குடியில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் 89 மடிக்கணினிகள் திருட்டு போனதாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
 
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன்(25), புதுச்சேரியை சேர்ந்த சுரேந்தர்(23) ஆகியோர் னமும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஒவ்வொரு மடிக்கணினிகளாக தங்கள் பையில் வைத்து நைசாக திருடிச்சென்று உள்ளனர். இவ்வாறு 3 மாதத்தில் 89 மடிக்கணினிகளை திருடிச்சென்று உள்ளனர்.
 
திருடிய மடிக்கணிகளை திருவான்மியூர், பல்லாவரம் பகுதிகளில் உள்ள மடிக்கணினி சர்வீஸ் கடைகளில் விற்று உள்ளனர். இதைஅயடுத்து அவர்கள் இருவரையும் காவல் துரையினர் கைது செய்தனர்.