1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. woman sub inspector complaint, a case filed against savukku sankar

சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் புகார். மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!

savukku shankar
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது. 
 
அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இப்போதைக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து ஆபாசமாக பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!