வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (08:26 IST)

அழகான கணவரின் முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

கணவர் அழகாக இருப்பதால் பல பெண்கள் அவருடன் பேசுகின்றனர், எனவே அவரது முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என ஒரு பெண் கூறியுள்ளார்.


 
 
சிதம்பரம் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதி காப்பாளராக பணிபுரிகிறார் முரளிதரன்(36). இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது மனைவி மாரியம்மாள் அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
முகத்தில் தீ பற்றி எரிந்ததால் அலறி எழுந்த முரளிதரனின் முகத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்தார் அவரது மனைவி மாரியம்மாள். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
 
இதனையடுத்து மாரியம்மாள் மீது அவரது கணவர் முரளிதரன் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து மாரியம்மாளிடம் விசாரணை நடத்தியது.
 
கணவரின் முகத்தில் ஏன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தீர்கள் என்ற பேலீசாரின் கேள்விக்கு பதில் அளித்த மாரியம்மாள், எனது கணவர் அழகாக இருப்பதால் அவருடன் பல பெண்கள் செல்போனில் பேசுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நான் அவருடையை முகத்தை தீ வைத்து எரித்து அசிங்கமாக்கினேன், இதனால் எந்த பெண்ணும் அவருடன் இனி பேசமாட்டார்கள் என கூறினார்.