1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:02 IST)

சென்னை அணி ரசிகர்களை தாக்கியது யார்? போட்டுடைத்த நாம் தமிழர் கட்சி

சென்னை அணி ரசிகர்களை தாக்கியது நாங்கள் இல்லை என நாம் தமிழர் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 

சிஎஸ்கே பனியன் அணிந்தவர்களை கண்மூடித்தனமான நாம் தமிழர் கட்சியினர் தாக்கியது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகளையும் போராட்டக்காரகள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்  சென்னை ரசிகர்களை தாக்கியது நாங்கள் இல்லை எனவும் அவர்களை தாக்கியது கருணாஸின் முக்குலத்தோர் கட்சி நபர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும்  தங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என தகவல் வெளியிட்டுள்ளனர்.