1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:01 IST)

ரூ 1 கோடி வரி செலுத்தாத விஷால் நீதிமன்றத்தில் 2வது முறையாக ஆஜர்!

நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு சம்மன் அனுப்பினர். இதனால்  இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 
 
இதுதொடர்பாக நடிகர் விஷால் இதுவரை சேவை வரித்துறையில் ஆஜராகவில்லை என கடந்த 17ம் தேதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 
 
தற்போது இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. பிறகு இதுதொடர்பாக நடிகர் விஷால் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில். இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.