வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (04:39 IST)

விஜயகாந்த் போட்ட சபதம்: போட்டுடைத்த பிரேமலதா

விஜயகாந்த் போட்ட சபதம்: போட்டுடைத்த பிரேமலதா

தமிழக முதல்வரான பிறகு தான் தமிழக சட்டம ன்றத்தில் கால் வைப்பபேன் என விஜயகாந்த் உறுதி பூண்டுள்ளார் என பிரேமலதா கூறினார்.
 

 
திண்டுக்கல்லில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழல் இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம்.
 
எங்கள் கூட்டணிக்கு மக்கள் வரவேற்பு மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த தேர்திலில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெல்லப்போவது உறுதி. அதனால் தான் தமிழக முதல்வரான பிறகு தான் தமிழக சட்டம ன்றத்தில் கால் வைப்பபேன் என விஜயகாந்த் உறுதி பூண்டுள்ளார் என்றார்.